நடைபாதை நழுவிய கவிதை - பிரமிள்
வான்மீகப் புற்றிருந்த
மருந்தீசுவரச் சந்நிதியில்
ஞானசம்பந்த
மோஹினி நாயனாரும்
மாஜி சமண ஹோமோ சாமி
நாவுக்கரசுப் பிக்ஷாடனாரும்
உதிர்த்த திருச் சுக்கிலத்தில்
உதித்தவன் போல்
எடுத்தான் தமிழை
நடைபாதை நழுவி
நடுத்தெருவுக்கு வந்த
குடிகாரன் ஒருவன்.
தொடுத்தான் சமத்துவ
தத்துவங்கள் முழுதையும்
சரித்திர நிஜத்துடன்:
'ஒரே இனம்
ஓர்ர்ரே பொணம்.'
(1986)
கனவு, செப். 1990.
காலண்டர்
காலத்தைப் பற்றி
மூர்த்திகள் இரண்டு
ஆரவாரமாய்
கருத்துப் பரிமாறிக் கொண்ட
'காலண்டர் எனக்கெதற்கு?
என்றான் பிச்சு,
'காலண்டர் தானேதற்கு'
என்றான் கிச்சு.
(1986)
கனவு, செப். 1990
வான்மீகப் புற்றிருந்த
மருந்தீசுவரச் சந்நிதியில்
ஞானசம்பந்த
மோஹினி நாயனாரும்
மாஜி சமண ஹோமோ சாமி
நாவுக்கரசுப் பிக்ஷாடனாரும்
உதிர்த்த திருச் சுக்கிலத்தில்
உதித்தவன் போல்
எடுத்தான் தமிழை
நடைபாதை நழுவி
நடுத்தெருவுக்கு வந்த
குடிகாரன் ஒருவன்.
தொடுத்தான் சமத்துவ
தத்துவங்கள் முழுதையும்
சரித்திர நிஜத்துடன்:
'ஒரே இனம்
ஓர்ர்ரே பொணம்.'
(1986)
கனவு, செப். 1990.
மானுடம் - பிரமிள்
ஒரு ஜூலை
ஒன்பது நாள்
சிங்கள வெறியின்
குதறலில் சிக்கி இ
லங்கையில் அலறிற்று
தமிழ்ச்சனம்.
அலறலைக் கேட்ட
உலகத்துக்கு
இலங்கைத் தமிழ்
விளங்கவில்லை.
ஆயினும் மானுடம்
ஒரே இனம்.
அலறல் மெஷின்கன்
உருமலாய் மாறிற்று -
ஓர்ர்ரே பொணம்!
(1986)
மீறல், அக்டோபர், 1993.
காலண்டர்
காலத்தைப் பற்றி
மூர்த்திகள் இரண்டு
ஆரவாரமாய்
கருத்துப் பரிமாறிக் கொண்ட
'காலண்டர் எனக்கெதற்கு?
என்றான் பிச்சு,
'காலண்டர் தானேதற்கு'
என்றான் கிச்சு.
(1986)
கனவு, செப். 1990
0 comments:
Post a Comment